வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த தென்காசி ரயில் நிலையம்

சொந்த ஊர் திரும்பிய மக்கள் பள்ளி விடுமுறை முடிந்து கிளம்பியதால், தென்காசி ரயில் நிலையத்தில், மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து பணியின் காரணமாக ஏராளமானோர் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த நிலையில் தங்கள் குழந்தைகளோடு சொந்த ஊர் திரும்பிய மக்கள், பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் திறப்பதால் தாங்கள் வசிக்கும் ஊருக்கு செல்ல ரயில் நிலையங்களுக்கு பெருமளவு வருகை தந்தனர்.

இதனால் தென்காசி ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்குமிடம், பயணிகள் நடைமேடை ஆகியவற்றில் வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Exit mobile version