தேனி நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்

கூடலூரில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் வார்டு வார்டாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூரில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர்களுக்கு சாலையின் இருபுறமும் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூடலூரில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான குப்பை கழிவு கிடங்கை சரி செய்ய தீர்வு காணப்படும் என்றும் அங்கு பூங்கா அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கப்படும் என்றும் வேட்பாளர்கள் உறுதி அளித்தனர். மாணவர்களுக்கு உடற்பயிற்சி மையம் மாறும் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்றும் வாக்களித்தனர்.

Exit mobile version