தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வாக்கு சேகரிப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 70க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version