செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கள்ளக்குறிச்சியில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து 8 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இங்குள்ள காந்தி சாலையில், ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடைஉள்ளது. இவர் காலையில் கடையை திறக்க சென்ற போது பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, 8 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

Exit mobile version