டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறித்த மர்ம நபர்கள்

நெல்லை மூலக்கரைப்பட்டி அருகே டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி புறவழிச்சாலை அருகே அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. மூலைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்த முகமது தௌபீக் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு டாஸ்மாக் கடையை அடைத்து விட்டு விற்பனை செய்த பணம் 69 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு காரில் அவர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்து, முகமது தௌபிக்கை காரிலேயே வைத்து அரிவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறித்து சென்றதாக தெரிகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த முகமது தௌபிக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version