தனியார் நகைக் கடையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு

சென்னை தனியார் நகை கடையில் தங்க வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

இது தொடர்பாக புகார் அளித்த நகைக்கடை உரிமையாளர், பத்து ஆண்டுகளாக கடையில் வேலை பார்த்து வந்த நிர்மல் ராஜ், நகைகளை திருடிச் சென்று விட்டதாக குறிப்பிட்டிருந்தார். வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தனிப்படை காவல்துறையினர், போரூர் அருகே உள்ள பரணிபுத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகளின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

Exit mobile version