2,000 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்த இளைஞர்.!

சென்னையில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து, கடைகளில் மாற்றிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளசரவாக்கத்தில் உள்ள கடைகளுக்கு வரிசையாக சென்ற இளைஞர், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை வாங்கிச் சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வியாபாரிகள் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தகவல் கொடுததனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இருசக்கர வாகனத்தில் தப்பமுயன்ற இலியாஸ் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் யூடியூப் பார்த்து, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்த போலி நோட்டுகளையும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version