சிவகாசியில் மூதாட்டியை கீழே தள்ளி செயினை பறித்துச் சென்ற இளைஞர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற இளைஞரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிவகாசி குட்டியஞ்சான் தெருவில், நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து மூதாட்டி அணிந்திருந்த செயினை பறித்தார். செயினை பாதுகாக்க போராடிய மூதாட்டியை கீழே தள்ளிய இளைஞர் தங்கச் செயினை பறித்து தப்பியோடினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்ததில், முழு சம்பவமும் பதிவாகி இருந்தது தெரியவந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version