இந்திய ராணுவ வீரர்களின் திறனை கண்டு உலகமே வியந்து பார்க்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்

இந்திய ராணுவ வீரர்களின் திறனை கண்டு உலகமே வியந்து பார்க்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தான் பதவியேற்றது முதல் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அதேபோல, இந்தாண்டும் இந்திய – சீனா எல்லைப்பகுதியான உத்தரகாண்ட் மாநில ஹர்சில் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே தீபாவளி திருநாளை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கண்டு இந்திய மக்கள் பெருமிதம் அடைவதாகவும், ஒய்வுபெற்ற ராணுவ வீரர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

Exit mobile version