கல்லணை தலைப்பிலிருந்து பிள்ளை வாய்க்கால் தூர்வாரும் பணிகள் மும்மரம்

முதலமைச்சரின் குடி மராமத்து திட்டத்தின் கீழ், தஞ்சை கல்லணை தலைப்பிலுள்ள பிள்ளை வாய்க்காலில், தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சை மாவட்டம் கல்லணையின் தலைப்பிலுள்ள, பாசன வாய்க்காலான பிள்ளை வாய்க்காலில் குடிமராமத்து பணிகளின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 647 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் இந்த வாய்க்காலில், தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளக்கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையேற்று, முதலமைச்சரின் குடிமராமத்துப் பணிகளின் கீழ் 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Exit mobile version