நாமக்கலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி

நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டிக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக லட்டு வழங்கப்பட உள்ளது. அதற்காக 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தொடங்கியது. இதற்காக ஆயிரத்து 200 கிலோ சர்க்கரை, 650 கிலோ கடலை மாவு, 40 டின் கடலை எண்ணெய், 20 கிலோ உலர் திராட்சை, ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Exit mobile version