அண்ணா சாலை மீண்டும் இருவழி பாதையாக மாற்றும் பணி நிறைவு

சென்னையில், கடந்த 10 ஆண்டுகளாக, சுமார் 3 கிலோ மீட்டர தூரம் உள்ள ஆயிரம் விளக்கு முதல் LIC பேருந்து நிறுத்தம் வரையிலான அண்ணா சாலையை, மெட்ரோ ரயில் தடம் அமைக்கும் பணிக்காக தற்காலிக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. அதனை இரு வழியாக மாற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்பணியானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த 3 தினங்களில் மாற்றப்பட்டு மீண்டும் பழையபடி இரு வழி பாதையாக மாற்றப்பட என்று சென்னை பெரு நகர மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களும், வணிகர்களும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version