வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் கொத்தடிமையாக விற்பனை

வீட்டு வேலைக்கு என அழைத்துச் சென்று ஓமன் நாட்டில் கொத்தடிமையாக வைத்துள்ள தனது மகளை மீட்டுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் தாய் தரங்கம்பாடி வட்டாச்சியரிடம் மனு அளித்துள்ளார்.

நாகை மாவட்டம் செம்பனார்கோவிலைச் சேர்ந்த மகேஸ்வரி வீட்டு வேலைக்கு என அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன், மூர்த்தி ஆகியோரால் கடந்த அக்டோபர் மாதம் ஐதராபாத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு சென்ற பின்னர் மகேஸ்வரி வீட்டிற்கு தொடர்பு கொள்ளவில்லை.

இந்நிலையில் பல நாட்கள் கழித்து மகேஸ்வரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தற்போது மஸ்கட்டில், தான் கொத்தடிமையாக தவிப்பதாகவும், மஸ்கட்டில் உள்ளவருக்கு தன்னை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும் கூறி கதறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் குமாரி, தரங்கம்பாடி வட்டாச்சியரிடம் தனது மகளை மீட்டுத்தரக்கோரி மனு அளித்துள்ளார்.

 

 

Exit mobile version