ஆம்பூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது

ஆம்பூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டிதோப்பு ரயில்வே மேம்பாலம் அருகில் ஒரு வீட்டில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆம்பூர் நகர காவல் ஆய்வாளருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்குசென்ற காவல்துறையினர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சரஸ்வதி என்னும் பெண்மணியைக் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். முன்னதாக, அப்பகுதியில் இருந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலித்தொழிலாளிகளுக்கு சரஸ்வதி பல ஆண்டுகளாக கஞ்சா விநியோகித்தது விசாரணையில் தெரியவந்தது. 

Exit mobile version