கடன் உதவி பெற்று தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த பெண்

தருமபுரியில் கடன் உதவி பெற்று தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

தருமபுரி அருகே குண்டல்பட்டியை சேர்ந்த விஜயலட்சுமி, சரவணன் ஆகியோர் ஸ்ரீ சாய்நாத் என்ற தொண்டு நிறுவனம் மூலம், 50 சதவீதம் மானியத்துடன் ஒரு லட்சம் ரூபாய் வீதம், 15 நாட்களில் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து விஜயலட்சுமி ஆயிரத்து 960 பேரிடம் ஆயிரத்து 600 ரூபாய் வசூல் செய்துள்ளார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் ஆகியும் கடன்பெற்று தராமல் பணம் கட்டியவர்கள் மீதே புகார் செய்வதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜயலட்சுமியிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர கோரி சர்வதேச மக்கள் உரிமைகள் கழகத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version