பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

இந்த கூட்டக் தொடரில், ரஃபேல் விமான ஊழல் புகார், சிபிஐ அதிகாரிகள் மாற்றம், ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்துவது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய, முழுமையான கூட்டத்தொடரான இந்த கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், மறைந்த பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, முதல் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

Exit mobile version