கடும் வெயில் மற்றும் தொடர் காற்றின் காரணமாக மளமளவென பரவிய காட்டுத்தீ

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் புள்ளிமான், பன்றி,முயல் போன்ற காட்டு விலங்குகள் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் காட்டிலுள்ள புற்களும்,கொடி, செடி, மர இலைகளும் காய்ந்தவாறு உள்ளதால் வனப்பகுதியில், காட்டுத் தீ ஏற்பட்டது. கடும் வெயிலின் காரணமாகவும்,காற்றின் காரணமாகவும் தீ மளமளவென பரவி வருகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் போராடினர். பல மணிநேர போராட்டத்திற்க்கு தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Exit mobile version