கலிபோர்னியா காட்டுத் தீயில் பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு – 630 பேர் காணவில்லை

கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த வாரம் காட்டுத்தீ பரவியது. இந்தாண்டின் மிகப் பெரிய காட்டுத்தீ என குறிப்பிடப்பட்ட இந்நிகழ்வால் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புகள் எரிந்து சாம்பலானது. மேலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் சிக்கி முற்றிலும் சேதமடைந்தது. இந்த கொடூர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 630 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். வீடுகளை இழந்த பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version