குவைத்தில் சிக்கித் தவிக்கும் கணவரை மீட்டுத்தர மனைவி கோரிக்கை

ஐந்து ஆண்டுகளாக குவைத்தில் சிக்கித் தவிக்கும் கணவரை மீட்டுத்தரக் கோரி அவரது மனைவி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் யேசு ராஜா. இவர் கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு ஓட்டுநர் வேலைக்காக சென்றதாக கூறப்படுகிறது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குவைத்திலிருந்து தன்னை தாயகம் திரும்ப அனுமதிக்குமாறு கடந்த 4 ஆண்டுகளாக கேட்டுக்கொண்டதாகவும், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த யேசு ராஜா, தனது முதலாளி கொலை மிரட்டல் விடுப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவரது மனைவி பிச்சை மேரி, தனது கணவரை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Exit mobile version