ஊரடங்கால் தமிழக – கேரள எல்லை சோதனைச்சாவடியில் நடந்த திருமணம்!!

ஊரடங்கால், மாநில போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழக-கேரளா எல்லை சோதனை சாவடியில், மூன்று இளம் ஜோடிகளின் திருமணம் நடைபெற்றது.

கடும் கட்டுப்பாடுகளால், உடுமலையில் உள்ள சின்ன சோதனைச் சாவடியில், வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த 3 இளைஞர்களுக்கும், கேரளாவை சேர்ந்த 3 இளம் பெண்களுக்கும் ஊரடங்கிற்கு முன்னதாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தற்போது, போக்குவரத்திற்கு தடை உள்ளதால், சின்ன சோதனை சாவடி முன்பே 3 ஜோடிகளுக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் முடிவெடுத்து, அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். அதன்படி, தமிழகத்தை சேர்ந்த மணமகன்களுக்கும், கேரளாவை சேர்ந்த மணமகள்களுக்கும் சோதனை சாவடியில், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

Exit mobile version