முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உயர்வு

கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலையில், கடந்த 7 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 100 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடலூர், கம்பம், உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் முல்லை பெரியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றன. எனவே கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Exit mobile version