ஒகேனக்கல்லுக்கு நீர் 16000 கனஅடியாக வரத்து குறைவு

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்த போதும், பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் 14வது நாளாக தடை தொடர்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியில் இருந்து 16 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து தொடர்வதால், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 14ஆவது நாளாக தொடர்கிறது.

Exit mobile version