விவசாய பாசனத்திற்காக பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது

குடிநீர் தேவைக்காகவும், விவசாய பாசனத்திற்காகவும் திண்டுக்கல் மாவட்டம், பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் விவசாய பாசனத்திற்கும், குடிநீரை தேவைக்கும் பரப்பலாறு அணையில் இருந்து நீர் திறக்க கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக்கையின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் வினை பரப்பலாறு அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். இந்த நீர் திறப்பின் மூலம் 1322 ஏக்கர் நிலங்கள் நேரடியாக விவசாய பாசன வசதி பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version