பாம்புகள் நடனமாடியதை கண்டு வியந்த கிராம மக்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில், தனியாருக்கு சொந்தமான காய்கறி தோட்டத்தில், பாம்புகள் நடனமாடியதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

குன்னூர் அருகே உள்ள ஜெகதாள கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான காய்கறித் தோட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், அடர்ந்த செடிகளுக்கு மத்தியில், 2 கட்டு விரியன் பாம்புகள் பின்னிப்பிணைந்து நடனமாடின.

இதனை அப்குதியைச் சேர்ந்த கிராம மக்கள் வியப்புடன் பார்த்தனர். சுமார், ஒரு மணிநேரத்திற்குப் பின்னர், அந்தப் பாம்புகள், கிராமப் பகுதியில் உள்ள வீடுகளில் நுழைந்ததால் பரபரப்பு நிலவியது. சிறிதுநேரம் கழித்து அந்தப் பாம்புகள் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.

Exit mobile version