காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி

ஓசூர் அருகே முகாமிட்டிருந்த 16 காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கும்ளாபுரம் வனப்பகுதியிலிருந்து அடிக்கடி யானைக்கூட்டம் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வந்தன. இந்நிலையில் ஓசூர் அருகே உள்ள ஒன்னல்வாடி கிராமத்தில் முகாமிட்டன. தகவல் அறிந்து வந்த வனத்துறை ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, காட்டிற்குள் விரட்டியடித்தனர்.காட்டுயானைகள் அனைத்தும் கிராமப்பகுதியை விட்டு வெளியேறியதால் ஒசூர் சுற்றுவட்டார கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Exit mobile version