அரசு அதிகாரிகள் உதவியால் முன்மாதிரி கிராமமானது புடையூர் ஊராட்சி

அரசு அதிகாரிகள் உதவியால் கடலூர் மாவட்டத்தில் உள்ள புடையூர் ஊராட்சி முன்மாதிரி கிராமமாக மாறி உள்ளது.

சேத்தியாத்தோப்பை அடுத்த புடையூர் மக்கள், அதிகாரிகளின் துணையோடு பசுமைப் பூங்காவை அமைத்து தங்கள் கிராமத்தை முன்மாதிரியாக மாற்றியுள்ளனர். இந்த கிராமத்தில் தரிசாக கிடந்த அரசு நிலத்தை சமதளமாக மாற்றிய பொதுமக்கள் மரம், செடி வகைகளை நட்டு பசுமை பூங்காவை உருவாக்கியுள்ளனர். இந்த பூங்காவிற்கு மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தங்கள் கிராமத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உதவிய அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் புடையூர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version