அதிமுக கூட்டணியின் வெற்றி திமுகவுக்கு மரண தண்டனையாக அமையும் – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவை அசிங்கப்படுத்த நினைத்த திமுகவின் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தற்போது அசிங்கப்பட்டு நிற்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில், ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சியினர் வீடுகளில் இருந்து மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். தேமுதிகவை அசிங்கபடுத்த நினைத்த திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தற்போது அசிங்கப்பட்டு நிற்கிறார்  என்று கூறினார். மேலும் அதிமுக கூட்டணியின் வெற்றி திமுகவுக்கு மரண தண்டனையாக அமையும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்

Exit mobile version