விமரிசையாக நடைபெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் மகோற்சவம் விழா

புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயில் மகோற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பிரசித்திபெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் 33ஆம் ஆண்டு மகோற்சவ விழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்துடன் வேதபுரீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி, கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து, தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version