பிளாஸ்டிக் தடை எதிரொலியால் அதிகரித்துள்ள பனை ஓலை பயன்பாடு

பிளாஸ்டிக் தடை எதிரொலியால், நெல்லையில் உள்ள கருப்பட்டி வியாபாரிகள், பனை ஓலை பெட்டிகளை பயன்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில், ராஜேஷ் கண்ணா என்பவர் கருப்பட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். முன்பெல்லாம் கருப்பட்டி விற்பனைக்காக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வந்த இவர், அரசு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என்று அறிவித்த பின், பன ஒலையால் செய்யப்பட்ட பெட்டிகளை பயன்படுத்தி வருகிறார். இதனால் பன ஒலை தொழிலாளர்களும் பயன் அடைவார்கள். மக்களும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறும் ராஜேஷ் கண்ணா, பிளாஸ்டிக்கை தடை செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

Exit mobile version