அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கிச்சூடு 4 பேர் பலி

அமெரிக்க கடற்படை தளத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகினர்.

புளோரிடா மாகாணம் பெனஸ்கோலாவில் உள்ள கடற்படை தளத்தில் சவூதி அரேபிய விமானப்படை வீரர் ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அவர் திடீரென அங்கிருந்தோர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சவூதி அரேபிய பயிற்சி விமானியும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், நிலவரத்தை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திய எப்.பி.ஐ அதிகாரிகள், பயங்கரவாத தொடர்பிருப்பதை மறுப்பதற்கில்லை என கூறியுள்ளனர்.

Exit mobile version