அமெரிக்க இடைக்கால தேர்தலில் செனட் சபை உறுப்பினர்களை தக்கவைத்தது டிரம்ப் கட்சி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் செனட் சபையில் பெரும்பான்மையான உறுப்பினர்களை அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி தக்க வைத்துக்கொண்டுள்ளது.அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான 435 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதேபோல், செனட் சபையில் உள்ள 35 பேரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

இந்நிலையில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண ஆளுநர்களை தேர்ந்தெடுப்பதற்கான இடைக்காலத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 50 மாகாணங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குப்பதிவில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன.

தேர்தலின் முடிவுகளின் படி, செனட் சபையை அதிபர் டிரம்பின் குடியரசுக்கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களுடன் தக்க வைத்துக்கொண்டுள்ளது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது.

Exit mobile version