ஆர்.பி.ஐ., சி.பி.ஐ. போன்ற அமைப்புகளில் நிலவும் குழப்பங்கள் பற்றி விவாதிக்க வேண்டுமென்று மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நோட்டீஸ்

ஆர்.பி.ஐ., சி.பி.ஐ. போன்ற அமைப்புகளில் நிலவும் குழப்பங்கள் பற்றி விவாதிக்க வேண்டுமென்று மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வழக்கமாக நவம்பர் மாதங்களில் தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடர் இந்த ஆண்டு, 5 மாநில தேர்தலால் டிசம்பர் மாதத்தில் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த கூட்டத் தொடர் வரும் ஜனவரி 8 ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத் தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு, இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்புச் சட்டம் உள்பட 20 க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்தநிலையில், ஆர்.பி.ஐ., சி.பி.ஐ. போன்ற அமைப்புகளில் நிலவும் குழப்பங்கள் பற்றி விவாதிக்க வேண்டுமென்று மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது.

 

 

Exit mobile version