ரயிலை மறித்து சிஐடியு தொழிற்சங்கத்தின்றனர் போராட்டம்

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் சென்னை கிண்டி ரயில்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் சென்ற ரயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் கலைந்து செல்லுமாறு போராட்டக்காரர்களை கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், கிண்டி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version