ரயில் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

ஆம்பூரில் ரயில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கரும்பூரை சேர்ந்த சங்கர் என்பவர் தனது அக்கா பானுமதி மற்றும் அக்காவின் பேரன் நித்திஷ் ஆகியோரோடு சென்னைக்கு செல்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அவர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது வாணியம்பாடியில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் மூவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version