சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 6,750 !

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்…

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 185 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 41 பேரும், திரு.வி.க. நகரில் 790 பேரும், தேனாம்பேட்டையில் 746 பேரும், அண்ணாநகரில் 554 பேரும், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தண்டையார்பேட்டையில் 581 பேரும், வளசரவாக்கத்தில் 522 பேரும், அடையாறில் 367 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூரில் 317 பேருக்கும், திருவொற்றியூரில் 147 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version