காவல் ஆய்வாளரை தவறாக பேசிய டிக்கெட் பரிசோதகர்

மதுரை திடீர் நகர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் முருகேசன் என்பவர் வாகன சோதனையில்
ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ரயில்வே டிக்கெட் பரிசோதகர் குருசாமி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய காவலர், அபதாரம் செலுத்த கூறியதாக தெரிகிறது. அபராதம் செலுத்த முடியாது என கூறிய குருசாமி, காவல் ஆய்வாளரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version