ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலை தொடர்ந்து, இரவு முழுவதும் ரயில் நிலையத்தில் டவுன் போலீசார், தமிழ்நாடு ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை சோதனையில் ஈடுபட்டனர். முழுவதுமாக நடைபெற்ற சோதனைக்கு பிறகு இது பொய்யான தகவல் என போலீசார் தெரிவித்தனர். மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version