தூத்துக்குடி-நெல்லை வழித்தடத்தை மின்வழிப் பாதையாக மாற்ற கோரிக்கை

தூத்துகுடியிலிருந்து சென்னைக்கு புதிய ரயில்கள் இயக்க வேண்டுமென்று மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும் தொழிற்சாலைகள் நிரம்பியுள்ள தூத்துக்குடியில் ரயில் வசதி குறைவாகவே உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் பாலக்காட்டிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும், தூத்துக்குடியிலிருந்து மைசூர் வரை இயக்கப்படும் விரைவு ரயிலை தடம் மாற்றி இயக்கவும் கேட்டுக் கொண்டுள்ளனர். தூத்துக்குடி, திருநெல்வேலி வழித்தடத்தை மின் வழிப் பாதையாக மாற்றவும், தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு புதிய ரயில்கள் இயக்கவும் பயணிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version