ராஞ்சியில் இன்று மூன்றாவது ஒரு நாள் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகிறது

5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2ற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மூன்றாவது போட்டி இன்று ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர். அதே சமயம் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி ஆடும் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில் ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்புடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version