நீதிமன்றத்துக்குள் வாகனங்களை திருடிய திருடன் சிசிடிவியின் மூலம் பிடித்த காவல்துறை

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை கண்காணித்து மடக்கிபிடித்த காவல்துறைக்கு வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் மேலும் இரண்டு வழக்கறிஞர்களின் வாகனங்கள் திருடு போனது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர், மாவட்ட நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு திருடனை அடையாளம் கண்டனர். இந்நிலையில் டிப்டாப் உடை அணிந்து ஒருவர் 5க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் அமர்ந்து சாவி போட முயன்றதை கண்காணித்த காவல்துறையினர் அவரை வளைத்து பிடித்தனர். விசாரணையில், மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த பொன்பெருமாள் என்பதும், நீதிமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. திருடனை லாபகரமாக பிடித்த காவல்துறையினருக்கு வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

Exit mobile version