லைட்டை போட்டு திருடிய திருடன்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மும்பையில் திருடச் சென்ற வீட்டில் போதையில் திருடன் தூங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

மும்பையில் உள்ள கிரிகுஞ்ச் பகுதியில் வசித்து வரும் சித்தாந்த சபூவு என்பவர்  சமீபத்தில் சொந்தமாக ஃபிளாட் ஒன்றில் வீடு வாங்கினார். அதில் புது வீட்டில் குடியேறிய சிந்தாந்த சபுவூ, பழைய வீட்டில் இருந்து அனைத்து பொருட்களையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வந்துள்ளார்.

இதற்காக  தினமும் பழைய வீட்டிலேயே தூங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவரது புது வீட்டில் திருடன் புகுந்துள்ளான்.  அவரது வீட்டில் லைட் எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவிக்க, சிந்தாந்த சபுவூ விரைந்துள்ளார். உள்ளே சென்ற போது மயங்கிய நிலையில் திருடன் கிடந்துள்ளான்.

சுற்றி முற்றி பார்த்தப்போது வீட்டில் சிந்தாந்த சபுவூ வைத்திருந்த மதுபாட்டில் காலியாக கிடந்துள்ளது. திருடன் மது அனைத்தையும் குடித்துவிட்டு பெட்டில் சொகுசாக படுத்து தூங்கியுள்ளான். இதுகுறித்து காவல்துறையில் சிந்தாந்த சபுவூ புகாரளித்ததன் அடிப்படையில் திருடன் கைது செய்யப்பட்டான்.

Exit mobile version