பாம்பன் ரயில் பாலத்தில் இன்று சோதனை ரயில் ஓட்டம்

பாம்பன் ரயில் பாலத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்குவதற்காக சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் – ராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் உள்ள பாம்பன் ரயில் தூக்குப் பாலம், கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி பழுதடைந்தது. இதையடுத்து, ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. மேலும், இந்திய ரயில்வே தலைமை பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், கடந்த 3 நாட்களாக பாம்பன் தூக்குப் பாலத்தை திறந்து மூடும் சோதனைப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பாம்பன் பாலம் வழியாக மீண்டும் ரயில் சேவையை இயக்குவது குறித்து, இன்று பயணிகள் இல்லாத ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

Exit mobile version