தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மின் வேலிகளை சீரமைக்க வேண்டும்: எல்லை பாதுகாப்புப்படை

குஜராத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் 2 ஆயிரத்து 61 எல்லை வேலி மின் கம்பங்களில், 616 மின் கம்பங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக எல்லை பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

மத்திய அரசிடம் எல்லை பாதுகாப்பு படை வழங்கிய அறிக்கையில், குஜராத் மாநிலம் புஜ் மற்றும் காந்திநகர் பிரிவில் உள்ள, 2 ஆயிரத்து 61 எல்லை வேலி மின் கம்பங்களில், 616 மின் கம்பங்கள் மட்டும் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லையில் உள்ள வேலிகளை வெட்டி, பாகிஸ்தான் தீவிரவாதிகள், அடிக்கடி ஊடுருவுவதாகவும் அதனை தடுப்பதற்கு, வெட்டப்பட்ட வேலிகளை சீரமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பழுதான ஜெனரேட்டர்களை விரைவில் சரி செய்தால், எல்லை பாதுகாப்பு பணி தடையின்றி நடைபெறும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version