மாணவர்களுக்கு ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் சிறப்பான வரவேற்பு

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டியில் உள்ள அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றதால், பெற்றோர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்

அந்தியூரை அடுத்துள்ள அம்மாப்பேட்டையில் உள்ளது அரசு துவக்கப்பள்ளி. இந்த பள்ளியில் 195 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பள்ளி தொடக்க நாளில் குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்த போது, ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து பாரம்பரிய முறைப்படி பழங்கள் மற்றும் பூ வகைகளை கொடுத்து வரவேற்பளித்தனர். இதனை கண்ட பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version