விசிக கட்சி சின்னம் பொறித்த பிரம்பை பயன்படுத்திய ஆசிரியர்

ஓமலூர் அருகே பள்ளி மாணவ மாணவிகளை கட்சியின் வண்ணம் பொறித்த பிரம்பால் அடித்து வந்ததாக ஆசிரியர் மீது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா தும்பிப்பாடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அன்புமணி என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவர்களுக்கு இவர் சரியாக பாடம் எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோர் அவரிடம் கேட்டபோது தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதையறிந்த ஊர் மக்கள், கணித ஆசிரியர் அண்புமணியை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வட்டார தொடக்க கல்வி அலுவலர் அன்பொழியிடம் புகார் கொடுத்தனர்.

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வண்ணம் பொறித்த பிரம்பு மூலம் அன்புமணி மாணவர்களை அடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, கணித ஆசிரியரின் மேல் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version