45 ஆண்டுகளாக இலவசமாக சிலம்பக்கலை பயிற்றுவிக்கும் ஆசிரியர்

தமிழரின் பாரம்பரியமிக்க சிலம்ப கலையை, திருவையாறில் 45 வருடங்களாக ஆசிரியர் ஒருவர், மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர் காசிநாதன், பாரம்பரியமிக்க சிலம்ப கலை ஆசிரியரான இவர், 45 வருடங்களாக மாணவிகளுக்கு இலவசமாக சிலம்ப கலையை பயிற்றுவித்து வருகிறார். ஏராளமான மாணவிகள் இதில் பங்கேற்று, சிலம்ப கலைகளை ஆர்வமாக கற்றுவருகின்றனர்.

உடல் வலிமையும், மனவலிமையும் பெறுவதற்கு சிலம்பக் கலை மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும், மன அழுத்தத்தை குறைக்கவும் இந்த சிலம்பக்கலை உதவுவதாகவும், மாணவிகள் தெரிவித்தனர். சிலம்ப கலை விளையாட்டுகளை வளர்க்கும் வகையில், மாவட்ட, மாநில அளவில் நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version