திருப்பூரில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி தீவிரம்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்டவை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், தேர்தல் அலுவலர்களுக்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version