மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமாக செயல்பட, முழுநேர தலைவரை நியமிக்க வலியுறுத்தி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய நீர்வளத்துறையின் தலைவராக உள்ள மசூத் உசேன், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் தலைவராக உள்ளார். இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் பெற்ற சுதந்திரமான தலைவரை நியமிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், சுதந்திரமான தலைவரை நியமிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மேகேதாட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக உள்ள மசூத் உசேன் பாரபட்சமாக செயல்படுவதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

 

Exit mobile version