சிறுபான்மையின மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழும் ஒரே மாநிலம் தமிழகம்-துணை முதலமைச்சர்

சிறுபான்மையின மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழும் ஒரே மாநிலம் தமிழகம் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலை ஒட்டி, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார். புகளூர் நான்கு ரோடு பகுதியில் வாக்கு சேகரித்த அவர், அதிமுக அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் சிறுபான்மையின மக்கள் பாதுகாப்புடன் வாழும் ஒரே மாநிலம், தமிழகம் எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார் அவர், அதிமுகவுக்கு துரோகம் செய்த செந்தில் பாலாஜிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

Exit mobile version