சக மாணவிகள் கிண்டல் செய்ததால் சிலம்பாட்டத்தில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவி தற்கொலை

தோழிகள் கிண்டல் செய்ததால், சிலம்பாட்டத்தில் மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்ற கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிப்பிபாறையை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிவேல் என்பவரின் மகள் திவ்யா. தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு மாநில அளவில் நடந்த சிலம்பு போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இந்த ஆண்டும் சிலம்பம் போட்டிக்கு தயாராகி வந்துள்ளார்.

இந்தநிலையில் திவ்யாவுடன் படித்து வரும் மாணவிகள் சிலர் அவரை தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திவ்யாவின் தந்தை கல்லூரி நிர்வாகத்திலும் புகார் அளித்துள்ளார். கிண்டல் தொடர்ந்ததால், வீட்டில் திடீரென தூக்கிட்டு திவ்யா தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version